தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா

சொந்த மண்ணில் தோல்வியுறும் ஆர்சிபியின் சவாலை ரஜத் படிதார் எப்படி எதிர்கொள்வார் என்பது குறித்து...

News image

ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா. - படங்கள்: ஜியோ ஹாட்ஸ்டார்.

Updated On :24 ஏப்ரல் 2025, 1:33 pm IST

ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

ஆர்சிபி அணி 8இல் 3 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் இருக்கிறது.

சொந்த மண்ணில் நடைபெற்ற அனைத்து போட்டிகளில் இந்த சீசனில் ஆர்சிபி தோல்வியுற்ற நிலையில் இன்றிரவு (ஏப்.24) சின்னசாமியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது.

ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் ரஜத் படிதார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சொந்த மண்ணில் தோல்வியுறும் சாபத்தை முறியடிப்பாரா ரஜத் படிதார் என ஆர்சிபி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ரஜத் படிதார் வெற்றிக்கு காரணம் என்ன?

ரஜத் படிதார் குறித்து ஜிதேஷ் சர்மா பேசியதாவது:

ரஜத் மிகவும் எளிமையானவர். டிரெஸ்சிங் ரூமில் (ஓய்வறை) அவர் இருப்பதே தெரியாது. ஆனால், மைதானத்தில் காலடி வைக்கும்போதுதான் அவர் கேப்டன் என்று உணர்வீர்கள்.

ரஜத் படிதார் அழுத்தமான தருணங்களிலும் அமைதியாகவே இருப்பார். நான் விக்கெட் கீப்பராக அவரிடம் யோசனைகளை கூறினால், உடனே கேட்டு ‘இது நடந்தால் என்ன செய்யலாம்?’ என்று கேட்பார். இதுதான் அவர் வெற்றியாளராக இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

சின்னசாமியில் காத்திருக்கும் சவால்

ரஜத் படிதாருக்கு இன்னும் ஒரு பெரிய சவால்தான் இருக்கிறது. இந்த சீசனில் சின்னசாமியில் எங்களின் முதல் வெற்றியைப் பெற வேண்டும். ஆனால், நம்பிக்கை மட்டும் மிகவும் பலமாக இருக்கிறது

எனக்கு தோன்றுவது என்னவென்றால் உங்கள் உள்ளுணர்வை நம்புவதே முக்கியம்.

விளையாட்டு மிகவும் வேகமாக நகரும். யோசிக்க நேரமே இருக்காது. என்ன சிந்தனை வந்தாலும், அதை நம்பி செயல்பட வேண்டும். உங்கள் உள்ளம் சொல்வதையே கேளுங்கள் என்றார்.

17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லாத அணியாக இருக்கும் ஆர்சிபிக்கு ரஜத் படிதார் கோப்பையை வென்று தருவாரென பலரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.