ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

ஏலத்தில் தவறு செய்துவிட்டோம்..! ஒப்புக்கொண்ட சிஎஸ்கே பயிற்சியாளர்!

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் அளித்த பேட்டியில் கூறியதாவது...

News image

சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் - படம்: ஐபிஎல்/ பிசிசிஐ

Updated On :26 ஏப்ரல் 2025, 1:58 pm IST

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு அதன் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் அளித்த பேட்டியில் ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார்.

சேப்பாக்கில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் சிஎஸ்கே அணி 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் சிஎஸ்கே வென்றிருக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் என யாருமே சரியாக விளையாடாத காரணத்தினால் அணியில் தொடர்ச்சியாக மாற்றம் வந்துகொண்டே இருக்கிறது.

தற்போதுவரை சரியான பிளேயிங் லெவனை சிஎஸ்கே அணியினால் கண்டுபிடிக்க முடியவில்லை என தோனியே கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் பரிணமித்துள்ளது

இது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறியதாவது:

சொல்லுவதற்கே கடினமாக இருக்கிறது. எங்களது செயல்பாட்டிற்கு ஏற்ப முடிவுகள் கிடைத்துள்ளன. பல போட்டிகளில் ஃபீல்டிங் போட்டியை மாற்றுவதாக இருந்துள்ளன.

எங்களது விளையாட்டு பாணி குறித்து விரிவாக பேச வேண்டியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் பரிணமித்துள்ளது, அதனால் இது எளிதானதல்ல.

எங்களது சாதனைகளை நினைத்து தற்போது பெருமையாக இருக்கிறது. ஏனெனில் நீண்ட காலமாக ஒரே மாதிரியாக நன்றாக விளையாடியுள்ளோம். வேறு வழியில் செல்ல அதிகமான நேரமெடுக்காது.

ஏலத்தில் சொதப்பல்

ஏலத்தில் மற்ற அணிகள் நன்றாகவே தேர்ந்தெடுத்ததை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். எங்களுக்கு சரியான வீரர்கள் அமையவில்லை. டாப் ஆர்டர் பேட்டர்களிடமிருந்து பொறுப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம்.

அந்தக் குறிப்பிட்ட சில பகுதிகளை சரிசெய்ய வேண்டும். நாங்கள் எதிர்பார்த்தமாதிரி அதுவும் நடக்கவில்லை. ஆனால், ஏலம் என்பது திடமான அறிவியல் ஆகாது. அது பாய்ந்து செல்லும் மிருகம் மாதிரியானது.

இது 25 வீடுகளை வாங்குவது மாதிரி, அந்த அனுபவத்திலுருந்து வெளிவருவது சில நேரங்களில் மனதளவிலும் உடலளவிலும் அயர்ச்சியை ஏற்படுத்தும்.

தவறுக்கு பொறுப்பேற்கிறேன்

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இப்போதும் நல்ல அணியாகவே கருதுகிறேன். நல்ல அணிக்கு மிகவும் தூரமாக இல்லை.

சில முக்கியான காயங்கள், சிலரின் ஃபார்ம் இல்லாததும் போட்டிகான திட்டமிடலிலும் சொதப்பி வருகிறோம். நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது. எதுவும் நினைத்ததுபோல் வரவில்லை.

நிச்சயமாக நாங்கள் எடுத்த முடிவுகள், அதனால் நடந்தவைகளுக்கு அதிகமாக பொறுப்பிருக்கின்றன. அது 100 சதவிகிதம் என்னில் இருந்து தொடங்குகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.