முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி...
விராட் கோலி
விராட் கோலிPTI
Published on
Updated on
1 min read

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் தனித்தனியாக பாராட்டு விழா நடைபெற்றது.

பெங்களூரு விதானசெளதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், விதானசெளதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதில், ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். 33 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையை பகிர்ந்த விராட் கோலி, “சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, முற்றிலும் உடைந்துவிட்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்ததற்கான காரணம் விராட் கோலிதான். அவரை காண்பதற்காகதான் லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூரு சாலைகளிலும் மைதானத்திலும் கூடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com