மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாம்பியன் மனநிலையை கேகேஆர் அணியில் புகுத்துவேன்: டிவைன் ப்ராவோ

கேகேஆர் அணியின் புதிய ஆலோசகர் டிவைன் ப்ராவோ அளித்த பேட்டி...

News image
டிவைன் ப்ராவோ- கோப்புப் படம்
Updated On :20 மார்ச் 2025, 6:11 am

DIN

கேகேஆர் அணியின் புதிய ஆலோசகர் ப்ராவோ சாம்பியன் மனநிலையை கேகேஆர் அணியில் புகுத்துவேன் எனக் கூறியுள்ளார்.

கௌதம் கம்பீருக்குப் பதிலாக கேகேஆர் அணியின் ஆலோசகராக முன்னாள் மே.இ.தீ. வீரரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான டிவைன் ப்ராவோ நியமிக்கப்பட்டார்.

கடந்தமுறை கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த ஆல்-ரவுண்டரான ப்ராவோ 631 விக்கெட்டுகள், 17 டி20 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

சாம்பியன் மனநிலையை கேகேஆர் அணியில் புகுத்துவேன்

ப்ரோவோ பேசியதாவது:

கேகேஆர் அணியில் சாம்பியன்களுக்கான மனநிலையை கொண்டு வருவேன். நான் வெற்றிப் பெறுவதை நம்புகிறேன்.

என்னுடைய சாதனைகள் அவர்களுக்காக பேசும். ஆனால், முடிவாக அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களை அவர்களது வழியிலேயே சாம்பியன்களாக்க உதவ வேண்டும்.

கேகேஆர் அணி மீது உலகம் முழுவதும் நன்மதிப்பு இருக்கிறது. நான் விளையாடும்போது கேகேஆரில் சில வீரர்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

80 சதவிகித சாம்பியன்கள்

இந்த அணியில் இணைவது மகிழ்ச்சி. டிரினிடாட் & டொபாக் அணியில் கேப்டனாக இருப்பது அதிர்ஷடமானது. உலகம் முழுமைக்கும் கேகேஆர் அணியின் புகழினை கொண்டுச் செல்வதில் உறுதியாக இருக்கிறேன்.

வெற்றிக்குக் காரணம் போட்டி மீதான ஆர்வமே. இந்த அணியில் 9-10 வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் வெற்றிப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

80 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே எப்படி வெற்றிப் பெறுவதெனத் தெரியும். அதுதான் எங்களது நோக்கமும்.

சந்திரகாந்த் பண்டிட் ஒரு லெஜெண்ட்

மற்றவர்களின் வெற்றியையும் நட்புணர்வையும் கொண்டாடுங்கள்.

சந்திரகாந்த் பண்டிட் ஒரு லெஜெண்ட். அவரை நான் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அணிக்கு இன்றியமையாத மதிப்பினைக் கொண்டு வருகிறார்.

அணிக்கு சாமர்த்தியமான வழிகளை மட்டுமல்ல வெற்றிப் பெறுவதற்கான கலாசாரத்தையும் உருவாக்கியுள்ளார் என்றார்.

கேகேஆர் அணிக்கு முதல் போட்டி மார்ச்.22இல் ஆர்சிபியுடன் மோதவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.