நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

ஆர்சிபி, கேகேஆர் பயிற்சியை பாதித்த மழை; நாளை போட்டி நடைபெறுமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

News image

படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)

Updated On :21 மார்ச் 2025, 10:08 pm IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) முதல் தொடங்கவுள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

மழையால் பாதித்த பயிற்சி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், மழையால் அந்த அணிகளின் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது நாளை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தொடரின் முதல் போட்டிக்கான இரு அணிகளுக்குமான பயிற்சி இன்று (மார்ச் 21) மாலை 5 மணிக்கு திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியதால் இரு அணிகளுக்குமான பயிற்சி பாதிக்கப்பட்டது. ஆடுகளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முழுவதுமாக மூடப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் சார்பில் கொல்கத்தாவுக்கு நாளை (மார்ச் 22) கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முதல் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. விட்டு விட்டு மழை பெய்யும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும், மழையால் போட்டி நடத்த முடியாத சூழல் உருவானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.