நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளதா? முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பேசியுள்ளார்.

News image

ஹார்திக் பாண்டியா - படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)

Updated On :21 மார்ச் 2025, 7:41 pm IST

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேசியுள்ளார்.

ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) முதல் தொடங்குகிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆரோன் ஃபின்ச் கூறியதென்ன?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் போட்டியை வென்று கொடுக்கும் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆரோன் ஃபின்ச் (கோப்புப் படம்)

ஆரோன் ஃபின்ச் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அனைத்து விஷயங்களும் மீண்டும் சரியாக அமைந்துவிட்டதாக உணர்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சில வீரர்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ரோஹித் சர்மாவை மறந்துவிடுங்கள், அவர் லெஜண்டரி வீரர். மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரண்ட் போல்ட் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தால், அவர்களால் இமாலய இலக்கை குவிக்க முடியும். பந்துவீச்சை தேர்வு செய்தாலும் அந்த அணிக்கு பிரச்னை இல்லை. பந்துவீச்சில் பும்ரா மற்றும் டிரண்ட் போல்ட் இருக்கிறார்கள். அழுத்தமான சூழலில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நாளை மறுநாள் (மார்ச் 23) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் அதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.