ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பயப்பட வேண்டிய அவசியமில்லை; அணிக்கு ஆதரவாக பேசிய அஜிங்க்யா ரஹானே!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேசியுள்ளார்.

News image

அஜிங்க்யா ரஹானே - படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)

Updated On :23 மார்ச் 2025, 3:54 pm IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

பயப்பட வேண்டிய அவசியமில்லை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில், முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்த சீசனில் இது எங்களுடைய முதல் போட்டி. எங்களது அணியில் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. சில விஷயங்களை சுட்டிக்காட்டி நான் பேச விரும்பவில்லை. ஒரு அணியாக நாங்கள் சில இடங்களில் நன்றாக செயல்பட்டதாக நினைக்கிறேன். ஒரு அணியாகவும், தனிநபராகவும் சில இடங்களில் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

கடந்த காலங்களில் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அதனால், அவர்களுக்கு ஆதரவாகவே நான் பேசப் போகிறேன். அவர்களது சிறப்பான ஆட்டத்தை முயற்சி செய்தனர். அது அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. இதுபோன்ற பல சூழல்களில் அணிக்காக அவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அவர்களது முயற்சி சரியாக வேலை செய்தால், அது உண்மையில் சிறப்பாக இருக்கும். இது மிகவும் நீண்ட தொடர். ஒரு அணியாக ஒவ்வொரு தனிநபருக்கும் எங்களுடைய ஆதரவை அளிக்க வேண்டும் என்றார்.

மார்ச் 26 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் அடுத்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி குவாஹாட்டியில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.