எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் அபாரம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாதை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றது.

News image

படம் | ஐபிஎல்

Updated On :30 மார்ச் 2025, 7:42 pm IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாதை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தில்லி கேபிடல்ஸ் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அனிகேத் அதிரடி, 164 ரன்கள் இலக்கு

டாஸ் வென்று முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு தொடக்கமே சிறப்பாக அமையவில்லை. அபிஷேக் சர்மா 1 ரன், இஷான் கிஷன் 2 ரன், நிதீஷ் ரெட்டி 0 ரன், டிராவிஸ் ஹெட் 22 ரன்கள் எடுத்து ஏமாற்றமளித்தனர். 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் திணறியது.

இதனையடுத்து, அனிகேத் வர்மா மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தனர். அனிகேத் வர்மா களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடி அசத்தினார். கிளாசன் 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய அனிகேத் வர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தில்லி கேபிடல்ஸ் அபார வெற்றி

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 16 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தியது.

தில்லி கேபிடல்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டு பிளெஸ்ஸிஸ் மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் சிறப்பாக விளையாடினர். இருப்பினும், மெக்கர்க் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், களமிறங்கிய அபிஷேக் போரெல் அதிரடியாக விளையாடினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

கே.எல்.ராகுல் 5 பந்துகளில் அதிரடியாக 15 ரன்கள் (2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் போரெல் 18 பந்துகளில் 34 ரன்களுடனும் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 14 பந்துகளில் 21 ரன்களுடனும் (3 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தில்லி கேபிடல்ஸ் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.