மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிஎஸ்கே ரசிகையை சீண்டிய ஆர்சிபி ரசிகர்கள்: ராபின் உத்தப்பா கண்டனம்

ஆர்சிபி ரசிகர்களின் மோசமான செயல்கள் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியதாவது...

News image
சிஎஸ்கே ரசிகையை வம்பிழுத்த ஆர்சிபி ரசிகர்கள், ராபின் உத்தப்பா. - படங்கள்: எக்ஸ் / ராபின் உத்தப்பா.
Updated On :17 மே 2025, 7:55 am

DIN

ஆர்சிபி ரசிகர்களின் மோசமான செயல்கள் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியது சமூக ஊடகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆர்சிபி, சிஎஸ்கே ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் சண்டைகள் நிகழ்ந்த வண்ணமாகவே இருக்கின்றன.

17 ஆண்டுகளாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி கடந்தாண்டு முதல் சிஎஸ்கே ரசிகர்களுடன் இந்த மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சீசனில் சிஎஸ்கேவுடனான 2 போட்டிகளிலும் ஆர்சிபியே வென்றது.

பெங்களூரில் நடந்த ஒரு போட்டிக்கு பிறகு ஒரு சிஎஸ்கே ரசிகையை சுற்றிநின்ற ஆர்சிபி வீரர்கள் நெருங்குவதும் அதற்கு அந்தப் பெண் 5 கோப்பைகளை தனது விரல்களில் காட்டியதும் பின்னர் காவல்துறையினர் வந்து அந்தப் பெண்ணை மீட்டதும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் யூடியூப் நேர்காணலில் பங்கேற்ற ராபின் உத்தப்பா இது குறித்து பேசியதாவது:

திடலுக்கு வெளியே சூழ்நிலை மிகவும் தீவிரமாக இருந்தது. வீரர்களின் பேருந்து செல்லும்போது ரசிகர்கள் செயல் பிடிக்கவில்லை. அடுத்ததாக ரசிகர்கள் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

கூட்டத்துக்கு இடையே ஒரு பெண்ணை ஆர்சிபி ரசிகர்கள் வம்பிழுத்தது மிகவும் ஒழுக்கக் கேடானது. சென்னையிலும் இது நடக்கிறது.

ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை கிண்டலடிக்க வெள்ளை நிற டீ ஷர்ட்டில் சிஎஸ்கே தடைசெய்யப்பட்ட அந்த 2 ஆண்டுகளை குறித்து அதற்குக் கீழே தல எனக் குறிப்பிட்டுள்ளனர்.

2 ஆண்டுகள் சிஎஸ்கே அணியினர் சிறையில் இருந்ததுபோல ஆர்சிபி ரசிகர்கள் அதைக் குறிப்பிடுகிறார்கள்.

விளையாட்டைத் தாண்டி செல்லும் இவைகளால் நான் மிகவும் கவலையடைகிறேன். கடைசியில் இவை எல்லாம் விளையாட்டு மட்டும்தானே என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.