ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 382ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெற கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,985 பேருக்கு கரோனா
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 29 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் ஓட்டப்பந்தய வீரர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கடந்த ஜூலை 1 முதலான கரோனா பாதிப்பு 382ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் புதிதாக 1,805 பேருக்கு கரோனா தொற்று
முன்னதாக ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவதற்கு மத்தியில் ஜப்பானில் மேலும் 4 நகரங்களுக்கு கரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.