டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் ஜே பிரிவு ஆட்டத்தில் ஹாங்காங்கைச் சேர்ந்த என்.ஒய். செங்கைத் தோற்கடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் பி.வி. சிந்து.
26 வயது சிந்து, 21-9. 21-16 என இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றார். உலகின் 7-ம் நிலை வீரரான சிந்து, அடுத்ததாகக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொள்கிறார். இதுவரை மியாவுக்கு எதிராக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதனால் சிந்து காலிறுதிக்குத் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு: