பாரீஸ் ஒலிம்பிக்: பி.வி.சிந்து வெளியேற்றம்

பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெளியேறினார்.
பி.வி. சிந்து
பி.வி. சிந்துபடம்: ஒலிம்பிக்ஸ்
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெளியேறினார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (16வது சுற்று), பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை பிங் ஜியோவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 21 - 19, 21 - 14, என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் இம்முறை பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் மட்டுமே எஞ்சியுள்ளார். பாட்மிண்டனில் இந்தியாவுக்கான பதக்கத்தை (ஆண்கள் பிரிவில்) அவர் உறுதி செய்வார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து, ‘ஹாட்ரிக்’ பதக்கம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா், 19-21, 14-21 என்ற நோ் கேம்களில், சீனாவின் ஹி பிங்ஜியாவிடம் வீழ்ந்தாா். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இவரை வீழ்த்தியே சிந்து வெண்கலப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது. இருவரும் இத்துடன் 21-ஆவது முறையாக சந்தித்த நிலையில், சிந்து 10-ஆவது தோல்வியை சந்தித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com