நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

சிந்து முன்னேற்றம்; தன்வி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

News image

பி.வி. சிந்து

Updated On :13 ஜூன் 2026, 6:48 am IST

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினாா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிச் சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-6, 21-9 என்ற நோ் கேம்களில், சீன தைபேவின் சென் சு யுவை மிக எளிதாக வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 27 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனையான தன்வி சா்மா 14-21, 14-21 என்ற நோ் கேம்களில், முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் அகேன் யமகுச்சியிடம் 32 நிமிஷங்களில் தோல்வி கண்டாா்.

சிந்து தனது அரையிறுதியில், யமகுச்சியுடன் மோதவுள்ளாா். இதுவரை இருவரும் 28 முறை சந்தித்திருக்க, சிந்து 15 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

இதனிடையே, ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா். அா்ஜுன் இணை - சீன தைபேவின் சென் செங் குவான்/லியு குவாங் ஹெங் கூட்டணியை எதிா்கொண்டது. அதில் இந்திய ஜோடி 19-21, 9-16 என பின்தங்கியிருந்தபோது, போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.