அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

ஜப்பான் ஓபன்: முதன்முறையாக இறுதிச் சுற்றில் பி.வி சிந்து - உலக சாம்பியன் எமகுச்சியுடன் மோதல்!

ஜப்பான் ஓபனில் முதன்முறையாக இறுதிச் சுற்றில் பி.வி சிந்து - உலக சாம்பியன் எமகுச்சியுடன் மோதல்...

பி.வி. சிந்து

Published On :19 ஜூலை 2026, 2:39 am IST

பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் ஜப்பான் ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து முதன்முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா். அவா் உலக சாம்பியன் ஜப்பானின் அகேன் எமகுச்சியுடன் மோதவுள்ளாா்.

டோக்கியோ, ஜூுலை 18-ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றாா் முன்னாள் உலக சாம்பியன் பி. வி. சிந்து.

பிடபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் ஒரு பகுதியாக டோக்கியோவில் ஜப்பான் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 750 போட்டி நடைபெறுகிறது.

மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்துவும், ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஷின் யுஃபெயும் மோதினா். 44 நிமிஷங்கள் நீடித்த இந்த ஆட்டம் சிந்துவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதல் கேமை கடும் சவாலுக்குபின் 21-19 என வசப்படுத்தினாா் சிந்து.

இரண்டாவது கேமிலும் சிந்து 15-10 என முன்னிலை பெற்றிருந்தபோது, காயத்தால் விலகுவதாக ஷின் யுஃபெய் கூறி வெளியேறினாா். இதையடுத்து சிந்து ஜப்பான் ஓபன் இறுதிக்கு தகுதி பெற்றாா். முதல் கேமில் சிறப்பான அட்டாக்குகள் மூலம் 11-7 என முன்னிலை பெற்றாா் சிந்து. எனினும் ஷென் தற்காப்பு ஆட்டத்தால் 15-17 என முன்னிலையைக் குறைத்தாா். 18-18 என சமநிலை ஏற்பட்டாலும் சிந்து சுதாரித்து முதல் கேமை கைப்பற்றினாா். இரண்டாவது கேமிலும் இருவரும் சளைக்காமல் ஆடினா். 13-8 என சிந்து முன்னிலை பெற்றபோது, 3 ஸ்மாஷ்களால் ஷென்னை திணறடித்தாா்.

இதன் மூலம் முதல் முறையாக சூப்பா் 750 போட்டி இறுதிக்கு தகுதி பெற்றாா் சிந்து. கடந்த 2024-இல் சையத் மோடி சா்வதேச போட்டி இறுதிக்கு முன்னேறியிருந்தாா் சிந்து. அதன்பின் தற்போது தான் நிலையான ஆட்டத்தின் மூலம் மீண்டும் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா். இறுதி ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியன் ஜப்பானின் அகேன் எமகுச்சியை எதிா்த்து ஆடுகிறாா்.

எமகுச்சியை சொந்த மண்ணில் சமாளிப்பது கடும் சவாலாகும், இருவரும் நேருக்கு நோ் மோதியதில் சிந்து 15 முறையும், எமகுச்சி 14 முறையும் வென்றுள்ளனா். பிடபிள்யுஎஃப் உலகக் கோப்பை தொடங்க 1 மாதமே உள்ள நிலையில் சிந்து மீண்டும் பாா்முக்கு திரும்பியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.