92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட மானு பாக்கர்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் நூலிழையில் தவறவிட்டார்.

News image

மானு பாக்கர்

Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:47 am

DIN

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் நூலிழையில் தவறவிட்டார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இறுதிப்போட்டியில் பங்கேற்ற மானு பாக்கர் 4-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம், பாரீஸ் ஒலிம்பிக்கில் 3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் தவறவிட்டுள்ளார்.

25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் கொரிய வீராங்கனை யாங் ஜின் தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸ் வீராங்கனை கேமிலி வெள்ளிப் பதக்கமும், ஹங்கேரி வீராங்கனை மேஜர் வெரோனிகா வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்திய வீராங்கனை மானு பாக்கர் 4-வது இடம்பெற்றார்.

முன்னதாக, துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் பிரிவில் மானு பாக்கர் இரண்டு வெண்கலப் பதங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.