“இந்திய ஹாக்கி அணியின் தூண்” எனப் போற்றப்படும் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சோர்வுற்ற முகத்தை அலங்கரித்த புன்னகையுடன், தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம், இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பி.ஆர். ஸ்ரீஜேஷ் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இந்திய ஹாக்கி அணியில் தனக்கென அழியாத முத்திரையையும் அவர் பதித்துள்ளார்.

படம் |எக்ஸ்
20 ஆண்டுகளுக்கும் மேலான ஹாக்கி வாழ்க்கையுடன், ஸ்ரீஜேஷ் இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். கோல்போஸ்டில் அவரது சிறந்த திறமைகளுக்காக அவருக்கு "சூப்பர்மேன்" என்ற புனைப்பெயரைப் பெற்றார். பாரீஸ் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெறத் தயாராகும் போது, அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, விளையாட்டின் மீது தளராத ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும்.

படம் |எக்ஸ்
யார் இந்த ஸ்ரீஜேஷ்?
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியின் புறநகர்ப் பகுதியான கீழக்கம்பலத்தில் பிறந்த ஸ்ரீஜேஷ் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தையின் தியாகம், ஹாக்கி உபகரணங்கள் வாங்குவதற்காக தங்கள் பசு மாட்டை விற்றது, விளையாட்டில் அவரது ஆரம்பகால ஆர்வத்தைத் தூண்டியது.
அவரது பாரம்பரிய உடை, மலையாள உச்சரிப்புக்காக கேலி, கிண்டல்களை எதிர்கொண்டாலும், ஸ்ரீஜேஷின் விடாமுயற்சியுடன், தனது தந்தையின் அசைக்க முடியாத ஆதரவால் உந்தப்பட்டார்.
அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஜி.வி.ராஜா விளையாட்டுப் பள்ளியில் பயின்றார். அங்கு அவரது பயிற்சியாளர் கோல்கீப்பிங் செய்ய பரிந்துரைத்தார். இந்த முடிவு அவரது வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கியமானது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது.
ஸ்ரீஜேஷின் உச்ச பயணத்தில் சவால்கள் இல்லாமல் இல்லை. இந்திய ஹாக்கி அணியின் முகாமில் ஹிந்தி பேசுவதற்கு ஆரம்பத்தில் சிரமப்பட்டார்.
ஆனால், ஒரு கோல்கீப்பராக அவரது தனிப்பட்ட திறமை மொழியின் தடையை மீறி அவரை சிறப்பாக்க அமைந்தது. ஆரம்பத்தில் ஓடுவதைத் தவிர்க்க கோல் கீப்பிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
ஸ்ரீஜேஷ் இந்தியாவின் ஹாக்கி அணியில் தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார். அவர் 2022 ஹாங்சோவில் தங்கம் உள்பட மூன்று ஆசிய விளையாட்டுப் பதக்கங்களை வென்றார்.

படம் |எக்ஸ்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் அவரது வியக்கவைக்கக்கூடிய செயல்திறனால், 15 ஷாட்களில் 13 ஷாட் கோல்களை தடுத்து அரணாக ஒரு செயல்பட்டார்.
2021, 2022 ஆம் ஆண்டுகளில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த கோல்கீப்பராக அறிவிக்கப்பட்டார். இது அவரது நிலையான சிறப்பிற்கு ஒரு சான்றாகும்.

படம் |எக்ஸ்
மைதானத்தில் சகவீரர்களை உரத்தக் குரலில் கத்தி உற்சாகப்படுத்துவது, அடிக்கடி அறிவுரைகள் கொடுப்பது போன்றவை அவரது விளையாட்டின் அடையாளமாக மாறியுள்ளது.
ஸ்ரீஜேஷ் பெற்றுள்ள பாராட்டுகள் இந்திய ஹாக்கிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பின் பிரதிபலிப்பாகும். 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ, 2021 ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது.
உலக விளையாட்டு தடகள வீரருக்கான விருதை வென்ற இரண்டாவது இந்தியர் ஸ்ரீஜேஷ் என்பது அவரது உலகளாவிய அங்கீகாரத்திற்கு மேலும் ஒரு சான்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












