கோலியின் பாச்சா என்னிடம் பலிக்காது: சவால் விடுகிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்!

உலகம் முழுக்க சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசியுள்ளார். ஆனால் என்னிடம் அவரால் ரன்கள் எடுக்கவே முடியவில்லை.
கோலியின் பாச்சா என்னிடம் பலிக்காது: சவால் விடுகிறார் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்!
Updated on
1 min read

ஐசிசி போட்டியில் இந்திய அணியை வெல்வதென்பது பாகிஸ்தான் அணிக்குப் பெரிய சிரமமான காரியம். அந்த அணிக்குப் பெரும்பாலும் தோல்விகள்தான் கிடைத்துள்ளது. அதிலும் உலகக்கோப்பைப் போட்டிகளில் பலமான அடிகள். அதனாலோ என்னவோ இந்தமுறை இந்திய அணியை அதிகமாகச் சீண்டிப் பார்க்கிறார்கள் பாகிஸ்தான் வீரர்கள்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான், கோலியை வம்புக்கு இழுக்கும் விதத்தில் பேட்டியளித்துள்ளார்.

ஜூன் 4-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அதுகுறித்து அவர் கூறியதாவது:

கோலியைக் கண்டு பாகிஸ்தான் அணி அஞ்சவில்லை. அவரை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியும். கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால் நான்கு போட்டிகளில் நான் அவரை மூன்றுமுறை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் அவர் தோல்வியடைந்துள்ளார்.

இந்திய ரசிகர்கள் முன்னிலையிலேயே கோலிக்குப் பந்துவீசியுள்ளேன். எனவே இங்கிலாந்தில் அவரை எதிர்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது. நான் இந்தமுறை அவரை எதிர்கொள்ளும்போது என்னிடம் தடுமாறிய அதே கோலியாகவே அவரை எண்ணுவேன். இது தவறாக இருக்கலாம். அவரும், அவர் விக்கெட்டுகளை எடுத்த அதே ஜுனைத் கானாகவே என்னை எண்ணுவார். இதனால் அவர் தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டைப் பறிகொடுக்கலாம். 

கோலி, உலகம் முழுக்க சிக்ஸர்களும் பவுண்டரிகளும் விளாசியுள்ளார். ஆனால் என்னிடம் அவரால் ரன்கள் எடுக்கவே முடியவில்லை. இது எனக்குப் பெருமைக்குரிய விஷயம். அந்தச் சாதனையை சாம்பியன் டிராபி போட்டியிலும் தொடர்வேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com