மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, அஸ்வின் - ஜடேஜா குறித்து கூறியதாவது:
உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், வெளிநாடுகளில் விளையாடும்போது அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் அணியில் இடம்பெறுவார்கள் என்று என்னால் 100 சதவிகிதம் கூறமுடியாது. ஏனெனில், அணியின் தேவைகள் என்ன என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் இருவரும் பேட்டிங் திறமை உள்ளவர்கள். ஒரு டெஸ்ட் போட்டியில் தேர்வாக எல்லாத் தகுதிகளும் கொண்டவர்கள். ஆனால் எதிரணியில் உள்ள பேட்ஸ்மேன்களில் எத்தனை பேர் வலது கை பேட்ஸ்மேன்கள் அல்லது இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதை வைத்துதான் இவர்களில் ஒருவரைத் தேர்வு செய்யமுடியும்.
எந்தக் கோணத்தில் பந்துவீசப்படுகிறது என்பது டெஸ்ட் போட்டியில் முக்கியமான அம்சம். இதுபோன்ற சிறிய விஷயங்களைக் கொண்டு வெளிநாட்டு டெஸ்டுகளில் சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்வோம். அவர்கள் இருவரையும் ஆல்ரவுண்டர்களாகவே கருதுகிறோம். இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களை நிரூபித்தவர்கள். இருவரும் அணியில் விளையாடும்போது கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை அணியில் சேர்க்கலாம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


