/

200-ஆவது போட்டியில் சதமடித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 200-ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்தார்.

News image
Updated On :22 அக்டோபர் 2017, 11:27 am

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இது விராட் கோலி விளையாடும் 200-ஆவது ஒருநாள் போட்டியாகும். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஒரு முனையில் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து வந்தாலும், மறுமுனையில் நங்கூரமாய் நின்ற விராட் கோலி சதமடித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.