ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி 2019-இல் இந்தியா சிறப்பாக விளையாடும் என இளம் பார்வர்ட் வீரரான ஜிஜே லால்பெகுலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியாவும், 8 ஆண்டுகளுக்கு பின் பங்கேற்கிறது. கேப்டன் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அபுதாபியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஜிஜே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அணியில் நான் சேரும் போதே சுனில் சேத்ரியுடன் இணைந்து ஆடி வருகின்றேன். மைதானத்திலும், வெளியிலும் எனக்கு பல உதவிகளை செய்துள்ளார் சேத்ரி.
தாய்லாந்துடன் நடைபெறவுள்ளதொடக்க ஆட்டத்தில் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். தற்போதைய அணி வலிமையுடன் உள்ளது. இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டோம். எங்களுக்கு ஆசியக் கோப்பை தான் உலகக் கோப்பை போன்றுள்ளது. பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் தலைமையில் அணி கட்டுக்கோப்பாக ஆடி வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










