பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையைப் பறிக்கக் கூடாது: ஐசிசிக்கு பிசிசிஐ பதில்! 

மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகை வழங்கும் என ஐசிசி எதிர்பார்த்த நிலையில் எந்த சலுகையும் கிடைக்கவில்லை...

News image
Updated On :29 டிசம்பர் 2018, 12:28 pm

எழில்

கடந்த 2016-இல் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன. இந்திய சட்டத்தின்படி வரித்தொகையை பிடித்தம் செய்து கொண்டு பிசிசிஐ, அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் டிவி உள்ளிட்டவை மீதித்தொகையை ஐசிசிக்கு செலுத்தின. மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகை வழங்கும் என ஐசிசி எதிர்பார்த்த நிலையில் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. இதனால் ஐசிசி அதிருப்தி அடைந்தது. ஐசிசியின் தற்போதைய தலைவராக இந்தியாவின் ஷசாங்க் மனோகர் உள்ளார். கடந்த அக்டோபரில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசி வாரிய கூட்டத்தில் இழப்பீடாக ரூ.160 கோடியை பிசிசிஐ செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அத்தொகையை பிசிசிஐ திருப்பித் தரவில்லை.

வரும் 31-ஆம் தேதிக்குள் பிசிசிஐ அத்தொகையை செலுத்த வேண்டும். இல்லையென்றால் 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் அவற்றை வேறிடத்துக்கு மாற்றி விடுவோம் என ஐசிசி எச்சரித்தது. பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏவுக்கு இதில் முடிவெடுக்க இன்னும் 10 நாள்களே உள்ளது. மேலும் இத்தொகையை தராவிட்டால், நிகழாண்டில் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய வருவாயில் இருந்து அத்தொகையை பிடித்தம் செய்வோம் எனவும் ஐசிசி தெரிவித்தது. 

ஐசிசியின் இந்தக் கடிதத்துக்கு பிசிசிஐ பதில் அளித்துள்ளது. 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் உரிமையை பிசிசிஐ-யிடமிருந்து பறிக்கக் கூடாது. வரிச்சலுகை வழங்கப்படும் என்கிற எந்தவொரு உத்தரவாதத்தையும் பிசிசிஐ அளிக்கவில்லை. அதற்காக முடிந்தவரை முயற்சி செய்வோம் என்றுதான் கூறப்பட்டது. வரிச்சலுகை பெறவேண்டியது ஐசிசி மற்றும் ஸ்டார் நிறுவனத்தின் பொறுப்பு. வரிச்சலுகைக்கு இந்தியா பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தால் ஐசிசி கூட்டங்களில் அதுகுறித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.