சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

போர்ச்சுகல்-ஈரான் டிரா (1-1)

வலுவான போர்ச்சுகல் அணிக்கும், ஈரான் அணிக்கும் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் ரிக்கார்டோ குரேஸ்மா, ரொனால்டோ

Updated On :27 ஜூன் 2018, 1:18 am IST

வலுவான போர்ச்சுகல் அணிக்கும், ஈரான் அணிக்கும் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
குரூப் பி பிரிவைச் சேர்ந்த போர்ச்சுகல்-ஈரான் அணிகள் இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை நள்ளிரவு சரன்ஸ்க் நகரில் நடைபெற்றது.
இப்பிரிவில் போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகியவை தலா 4 புள்ளிகளுடன், ஈரான் 3 புள்ளிகளுடனும் உள்ளன. வலுவான போர்ச்சுகல் முதல் ஆட்டத்தில் ஸ்பெயினுடன் டிரா செய்தது. அதே நேரத்தில் மொராக்கோவை வென்றது. ஈரானும் மொராக்கோவை வீழ்த்தியது. இதனால் மொராக்கோ வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்பாக நடைபெற்றது. 
ஆட்டம் தொடங்கியது முதலே போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஈரான் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முயன்றார். ஈரான் அணியினரும் பதிலுக்கு கோல் போட முயன்றனர். இதற்கிடையே 45-ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் அட்ரியன் சில்வா கடத்தி அனுப்பிய பந்தை ரிக்கார்டோ குரேஸ்மா 18 அடி தூரத்தில் இருந்து அற்புதமாக கோலாக்கினார். முதல் பாதி நிறைவில் போர்ச்சுகல் 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி தொடங்கியதும் 53-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை கோலாக்காமல் தவற விட்டார் ரொனால்டோ. ஆட்டம் முடிய கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பு மூலம் ஈரான் வீரர் கரீம் அன்சாரி பார்ட் கோலடித்தார்.
இதனால் ஆட்டம் 1-1 ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த டிராவால் போர்ச்சுகல், ஈரான் அணிகளுக்கு தலா 1 புள்ளி கிடைத்தது. எனினும் 5 புள்ளிகளுடன் போர்ச்சுகல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரத்தில் ஈரான் 4 புள்ளிகளுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
ஈரான் ரசிகர்களிடம் ரொனால்டோ கெஞ்சல்:
போர்ச்சுகல் தரப்பில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிரண்டு ஆட்டங்களில் வெற்றியைத் தேடித்தந்தார். 
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு போர்ச்சுகல் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டல் முன்பு கூடிய ஏராளமான ஈரான் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் மிகுந்த கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் தூக்கமின்றி பாதிக்கப்பட்ட வீரர் ரொனால்டோ ஜன்னல் அருகே வந்து தங்களை தூங்க விடுமாறு ஈரான் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.