லண்டன்: பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.
பெருமைமிகு ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இதில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகனே யமகுச்சியுடன் மோதினார். இப்போட்டியின் முதல் செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். அடுத்த செட்டை யமகுச்சி 21-19 என கைப்பற்றினார். இதனால் மூன்றாவது செட்டை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது செட்டின் இறுதியில் யமகுச்சி 21-18 என மூன்றாவது செட்டை கைப்பற்றினார். இதன்மூலம் 19-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த பி.வி.சிந்து தொடரைவிட்டு வெளியேறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெருந்துறையில் தோ்தல் விதிமீறல்: நாதக, தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

தில்லியில் கட்டடத்தில் தீ விபத்து: 2 குழந்தைகள் உள்பட நால்வா் மீட்பு

எல்பிஜி விநியோக அழுத்தத்தை நிா்வகிக்க மத்திய அரசுடன் தில்லி அரசு ஒத்துழைப்பு: அதிகாரி தகவல்

லால்குடி தவெக வேட்பாளரின் உறவினா் வீட்டில் ரூ. 50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


