ஆசிய பாரா போட்டிகளில் திங்கள்கிழமை மட்டும் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய பாரா போட்டி ஜகார்த்தலாவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று மட்டும் இந்தியா தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
ஈட்டி எறிதல்:
இதில், இந்தியாவின் சந்தீப் சௌதரி ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் 60.01மீ தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் தனது 3-ஆவது வாய்ப்பில் இந்த தூரத்துக்கு ஈட்டியை எறிந்தார். இது நடப்பு ஆசிய பாரா போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும்.
இலங்கை வீரர் 59.32மீ தூரத்துக்கும், ஈரான் வீரர் ஓமிதி அலி 58.97மீ தூரத்துக்கும் ஈட்டி எறிந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
நீச்சல்:
ஆடவர் பட்டர்ஃபிளை 50மீ பிரிவில் இந்தியாவின் ஜாதவ் சுயாஷ் நாராயண் தங்கப்பதக்கம் வென்றார்.
1500மீ ஓட்டம்:
1500மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ரஜூ ரக்ஷிதா தங்கப்பதக்கம் வென்றார்.
இதுமட்டுமின்றி இன்று ஒரே நாளில் இந்தியா 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி 3 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கம் என 16 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


