ஆசியக் கோப்பை: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!
ஆட்ட நாயகன் விருது லிடன் தாஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை ஷிகர் தவன் வென்றார்...


வங்கதேச அணியை கடும் போராட்டத்துக்கு பின் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 7-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நிறைவாக இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. தொடக்க வீரர் லிடன் தாஸ் 121 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 50-ஆவது ஓவரின் கடைசி பந்தில் இந்திய வெற்றி இலக்கை எட்டியது. கடும் போராட்டத்துக்கு பின் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ரோஹித் சர்மா அதிகப்பட்சமாக 48 ரன்கள் எடுத்தார்.
ஆட்ட நாயகன் விருது லிடன் தாஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதை ஷிகர் தவன் வென்றார்.
அதிக ரன்கள்

ஷிகர் தவன் (இந்தியா)
அதிக விக்கெட்டுகள்

ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...