மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம்: நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம் செய்தது தொடர்பாக பிரபல நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

News image
Updated On :22 ஏப்ரல் 2019, 6:56 am

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம் செய்தது தொடர்பாக பிரபல நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Story image

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியின் போது மைதானத்தில் அட்டகாசம் செய்து, தன்னை ஆட்டத்தை பார்க்க விடமால் செய்ததாக ஹைதராபாத் போலீஸில் ஒருவர் புகார் அளித்தார். மேலும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்தார்.

இதையடுத்து பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை பிரஷாந்தி உள்ளிட்ட 6 பேர் மீது 341, 188 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக ஹைதராபாத் போலீஸார் தெரிவித்தனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.