இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழுத் தலைவராக அனில் கும்ப்ளேவை நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கும்ப்ளேவை கேப்டனாக நியமித்தபோது, என்னுடைய அறைக்கு வந்து, உனக்கு எப்படி விருப்பமோ அதுபோல விளையாடு. அடுத்த இரு தொடர்களுக்கு உன்னை நீக்கமாட்டோம் என்று கூறினார். அதுபோன்ற ஒரு நம்பிக்கையை வீரர்களிடம் ஏற்படுத்துவதால், அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்வு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தோல்வி குறித்து சேவாக் கூறியதாவது: அரையிறுதியில் 5-ம் நிலை வீரராக தோனி களமிறங்கியிருக்கவேண்டும். அதற்குப் பின்னால் பாண்டியா விளையாட வந்திருக்கலாம் என்றவர் மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான தொடர் குறித்தும் பேசியுள்ளார். இந்திய அணி நான்கு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் மட்டுமே ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கும். சமீபகாலமாகச் சரியாக விளையாடாமல் போனாலும் ராஹானேவைத்தான் நான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



