ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தன்பாலின உறவை விமரிசனம் செய்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் மீது ஐசிசி புகார்!

ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாக கேப்ரியல் மீது கள நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள்.

News image
Updated On :13 பிப்ரவரி 2019, 6:49 am

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. எனினும் டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இந்த டெஸ்ட் ஆட்டத்தின்போது மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஷன்னான் கேப்ரியல் - இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது தன்பாலின உறவு குறித்து கேப்ரியல் விமரிசனம் செய்ததாகக்  கூறப்படுகிறது. இதற்கு, இந்தச் சொல்லை ஒருவரை அவமானப்படுத்துவதற்குப் பயன்படுத்தவேண்டாம். தன்பாலின உறவாளராக இருப்பதில் தவறில்லை என்று பதிலளித்துள்ளார் ரூட். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. எனினும் கேப்ரியல் பேசிய சொற்கள் மைக்கில் பதிவாகவில்லை.

இந்நிலையில் ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாக கேப்ரியல் மீது கள நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள். இதனால், கேப்ரியல் மீதான  நடவடிக்கை குறித்து டெஸ்ட் நடுவர் ஜெஃப் குரோவ் விரைவில் முடிவெடுக்கவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.