குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

துளிகள்...

Updated On :24 ஜனவரி 2019, 1:08 am IST


 ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் முதலாவது அரையிறுதி ஆட்டம் கேரள மாநிலத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் விதர்பா, கேரள அணிகள் மோதுகின்றன. இதேபோல், பெங்களூரில் சௌராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய அணிகளுக்கு இடையே 2ஆவது அரையிறுதி ஆட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.


 நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக முதல் ஒரு நாள் ஆட்டத்தில் வியாழக்கிழமை மோதுகிறது.


 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 2 முறை தங்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை கே.சஞ்சிதா சானுவுக்கு போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு திரும்பப் பெற்றது. ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.