பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

நியூஸிலாந்து தொடரில் கோலிக்கு ஓய்வு; ரோஹித் கேப்டன்

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் இருந்தும், டி20 தொடரில் இருந்தும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :23 ஜனவரி 2019, 7:25 pm IST


நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி 2 போட்டிகளில் இருந்தும், டி20 தொடரில் இருந்தும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"கடந்த சில மாதங்களாக விராட் கோலியின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, இந்தியாவில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு முன் அவருக்கு ஓய்வு வழங்குவது தகுந்ததாக இருக்கும் என்று அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவினர் கருதுகின்றனர். அதனால், கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார். நியூஸிலாந்து தொடரில் விராட் கோலிக்கு மாற்று வீரர் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டது.    

நியூஸிலாந்து தொடருக்கு பின் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதன்பிறகு ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து மே, ஜூலை மாதங்களில் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. 

அதனால், உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டே இந்திய அணியின் வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. நியூஸிலாந்து தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பூம்ராவுக்கு ஏற்கனவே ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கோலிக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.