அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும்: இந்தியா போட்டி குறித்து வங்கதேச கேப்டன் எச்சரிக்கை

இந்தியா, வங்கதேசம் மோதும் உலகக் கோப்பை லீக் போட்டி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :2 ஜூலை 2019, 9:37 am IST

இந்தியா, வங்கதேசம் மோதும் உலகக் கோப்பை லீக் போட்டி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. 7 புள்ளிகளுடன் இருக்கும் வங்கதேசதம் அரையிறுதியில் நுழைய இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடனான வெற்றி முக்கியமானதாக நிலவுகிறது. அந்த அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 476 ரன்களும், 10 விக்கெட்டுகளும் குவித்து உலகக் கோப்பையின் முக்கிய வீரராகத் திகழ்கிறார். 

இந்நிலையில், இந்தியாவுடனான போட்டி குறித்து வங்கதேச கேப்டன் மஷ்ரஃபி மோர்டாஸா, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

நடப்பு உலகக் கோப்பையில் எங்களின் நிலை என்ன என்பது அடுத்த 2 ஆட்டங்களில் தெரிந்துவிடும். இருப்பினும் நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே விளையாடி வருகிறோம். ஷகிப் அல் ஹசன் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி இந்த உலகக் கோப்பையின் சிறந்த வீரராகத் திகழ்கிறார்.

எங்களது பேட்டிங் வலிமையாக உள்ளது. எனவே அதில் மாற்றம் இருக்காது. நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுடன் இன்னும் கூடுதல் கவனத்துடன் விளையாடி இருக்க வேண்டும். 

இந்த தொடரில் இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. எனவே அவர்களுடனான சவால் மிகக் கடுமையாக இருக்கும். எனவே வீரர்கள் அனைவரும் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டியது மிக அவசியம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.