அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஆஸி. அணிக்கு பின்னடைவு: புதிய ஆல்-ரவுண்டர் மாற்று வீரராக 'திடீர்' அழைப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று ஆல்-ரவுண்டர் அழைக்கப்பட்டுள்ளதாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்தார். 

News image
Updated On :12 ஜூன் 2019, 11:06 am IST

ஆஸ்திரேலிய அணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாற்று ஆல்-ரவுண்டர் அழைக்கப்பட்டுள்ளதாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்தார். 

உலகக் கோப்பையில் இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேசும்போது,

ஸ்டாய்னிஸ்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் பாகிஸ்தானுடனான போட்டியில் பங்கேற்க மாட்டார். அடுத்த இரு தினங்களில் அவருடைய உடல்தகுதி குறித்து முழு விவரம் தெரியும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆல்-ரவுண்டரான மிட்செல் மார்ஷ் அழைக்கப்பட்டுள்ளார். அவரும் இன்னும் இரு தினங்களில் அணியில் இணைவார் என்று தெரிவித்தார்.

ஐசிசி விதிகளின் படி உலகக் கோப்பை தொடரின் மத்தியப் பகுதியில் காயமடைந்த வீரருக்கு மாற்று வீரரை தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பிறகு காயமடைந்த வீரர் குணமடைந்துவிட்டால் அணியில் மீண்டும் சேர்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.