ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மைதானத்தில் அத்துமீறி நுழைந்து தோனியைத் துரத்திய ரசிகர்! (விடியோ)

தோனி வேகமாக ஓடத் தொடங்கினார். அந்த ரசிகரும் தோனியைத் துரத்தியபடி ஓடினார். பிறகு...

News image
Updated On :6 மார்ச் 2019, 12:24 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.  கேப்டன் கோலியின் 116, குல்தீப் யாதவ் 3 விக்கெட் போன்றவை அணியின் வெற்றிக்கு வித்திட்டன. முதலில் ஆடிய இந்தியா 250 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸி. 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்ய இந்திய வீரர்கள் மைதானத்துக்குள் வந்துகொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடைபெற்றது. தல என்கிற டிஷர்ட் அணிந்திருந்த ரசிகர் ஒருவர் மைதானத்தினுள் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்கள் அருகே சென்றார். மேலும், அவர் தோனி அருகே சென்றபோது உடனே தோனி வேகமாக ஓடத் தொடங்கினார். அந்த ரசிகரும் தோனியைத் துரத்தியபடி ஓடினார். பிறகு, ஸ்டம்புகளுக்கு அருகே சென்று நின்றார் தோனி. ஓடி வந்த வேகத்தில் ரசிகர் தோனியில் காலில் விழுந்து பிறகு அவரை அணைத்துக்கொண்டார். இதையடுத்து, தாமதாக நிலைமையை உணர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள், பிறகு அந்த நபரை அழைத்துச்சென்றார்கள்.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.