மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நாளையும் தொடரவுள்ள இந்தியா ஏ - தெ.ஆ. ஏ ஒருநாள் ஆட்டம்!

தவன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நாளை காலை 9 மணிக்கு...

News image
Updated On :4 செப்டம்பர் 2019, 12:30 pm

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏ மற்றும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 4-வது ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக நாளையும் தொடரவுள்ளது.

மழை காரணமாக 25 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. ஹெண்ட்ரிக்ஸ் 60 ரன்கள் எடுத்தார்.

பிறகு விளையாடிய இந்திய ஏ அணி, 7.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் ஆட்டம் நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நாளை காலை 9 மணிக்கு ஆட்டம் தொடரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.