ஜெர்மனியின் முன்னணி கால்பந்து கிளப் அணியான போருஷ்யா டார்ட்மண்ட் தமிழகத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கு அடிப்படை கால்பந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
பண்டஸ்லீகா போட்டி சாம்பியன் அணியான டார்ட்மண்ட் மற்றும் வேர்ல்ட் 1 ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.
இதுதொடர்பாக ஆசிய-பசிபிக் பிராந்திய டார்ட்மண்ட் அணி மேலாண்மை இயக்குநர் சுரேஷ் லட்சுமணன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சென்னை நகரில் 22 பள்ளிகள் மற்றும் தமிழகம் முழுவதும் 23 பள்ளிகள் என மொத்தம் 45 பள்ளிகளைச் சேர்ந்த 8 முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அடிப்படை கால்பந்து பயிற்சி இலவசமாக தரப்படும்.
எங்கள் கிளப்பின் பயிற்சியாளர்கள், இந்திய பயிற்சியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் தற்போதைய கால்பந்து ஆட்டமுறைகள் தொடர்பாக பயிற்சி அளிப்பர். இதன் பின் சிறுவர்களுக்கு தீவிர பயிற்சி தரப்படும். யூத் கால்பந்து லீக் போட்டிகளும் நடத்தப்பட்டு சிறந்த வீரர்களும் அடையாளம் காணப்படுவர். ஆசிய அளவில் எங்கள் அணியின் முதல் முயற்சி இதுவாகும் என்றார்.
வேர்ல்ட் 1 நிறுவன சிஓஓ விக்ரம் ராஜ்குமார் கூறியதாவது: ஏற்கெனவே மிúஸாரம், மணிப்பூரில் கால்பந்து வளர்ச்சித் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்போது தமிழகத்திலும் டார்ட்மண்ட் அணியுடன் இணைந்து செயல்படுத்துகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


