விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடையே வலுக்கும் கருத்து வேறுபாடு?

கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வலுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
விராட் கோலி, ரோஹித் ஷர்மா இடையே வலுக்கும் கருத்து வேறுபாடு?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வலுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்திய அணி இரு தரப்பாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விராட் கோலி பக்கத்தை ஏற்கனவே பின்தொடர்வதை நிறுத்தியிருந்த ரோஹித் ஷர்மா தற்போது அவரது மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா பக்கத்தை பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளார். 

இதற்கெல்லாம் இந்திய அணியில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஏற்படுத்திய சில கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

நடந்து முடிந்த உலகக் கோப்பையில் குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், ரோஹித் ஷர்மா இக்காலக்கெடுவை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் அணித் தேர்வு மற்றும் செயல்பாடுகளிலும் உள்ள சில நடவடிக்கைகள் ரோஹித்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அணி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இருவரும் இதுதொடர்பான பிரச்னையை எழுப்பும் வரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என்று உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிஓஏ குழு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை விராட் கோலி பின்தொடர்ந்து வருகிறார். ஆனால், அவருடைய மனைவி ரித்திகா சஜ்தேஷ் பக்கத்தை பின்தொடர்வதில்லை. அதேபோன்று ரோஹித், ரித்திகா ஆகிய இருவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் அனுஷ்கா ஷர்மா பின்தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com