தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

எனக்கு கரோனாவா?: பிரையன் லாரா மறுப்பு

தனக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெளியான செய்திகளை பிரபல வீரர் பிரையன் லாரா மறுத்துள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:34 pm IST

தனக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெளியான செய்திகளை பிரபல வீரர் பிரையன் லாரா மறுத்துள்ளார்.

131 டெஸ்டுகள், 299 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய லாரா, 2006-ல் ஓய்வு பெற்றார். இந்நிலையில் பிரையன் லாராவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து இன்ஸ்டகிராமில் லாரா தெரிவித்ததாவது:

எனக்கு கரோனா தொற்று உறுதியானதாக வெளியான செய்திகளை நான் படித்தேன். அதைப் பற்றி தெளிவுபடுத்துகிறேன். இந்தச் செய்தி தவறானது மட்டுமல்லாமல், கரோனா அச்சுறுத்தல் நிலவும் இச்சூழலில் ஒரு சமூகத்தில் இந்தச் செய்தியின் மூலம் பதற்றத்தை உருவாக்கக் கூடாது.

இச்செய்தி தனிப்பட்ட முறையில் என்னைப் பாதிக்கவில்லை. ஆனால், பொறுப்பற்ற தவறான செய்தியால் என் வட்டத்தில் உள்ளவர்கள் வருத்தமடைந்துள்ளார்கள். இதுதான் எனக்குக் கவலையளிக்கிறது. பரபரப்புக்காக வைரஸ் தொற்றைப் பயன்படுத்தக்கூடாது. இப்போதைக்கு கரோனா பாதிப்பு விலகப் போவதில்லை. அதனால் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.