3-வது டி20: இந்திய அணிக்கு அபராதம்

இந்த ஆட்டத்தில் 20 ஓவர்கள் வீச இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது.
3-வது டி20: இந்திய அணிக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களே எடுத்தது.

இந்த ஆட்டத்தில் 20 ஓவர்கள் வீச இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் இந்திய அணிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com