லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இலங்கையுடனான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா பதிலடி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 4:48 pm

DIN


இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக 56 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷனாகா 66 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் சிபாம்லா 4 விக்கெட்டுகளையும், முல்டர் 3 விக்கெட்டுகளையும், நிகிடி மற்றும் நோர்க்கியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு டீன் எல்கர் மற்றும் எய்டன் மார்கிரம் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிரம் 68 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வான் டர் டசன் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட எல்கர் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து, கேப்டன் குயின்டன் டி காக்கும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் 220 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து, அனுபவ பாப் டு பிளெஸ்ஸி மற்றும் தெம்பா பவுமா கூட்டணி அமைத்து விக்கெட்டைப் பறிகொடுக்காமல் பார்த்துக் கொண்டனர். 

2-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்து 79 ரன்கள் பின்தங்கியுள்ளது.

டு பிளெஸ்ஸி 55 ரன்களுடனும், பவுமா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இலங்கைத் தரப்பில் பெர்னான்டோ, ஷனாகா, ஹசரங்கா மற்றும் குமாரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.