விளையாட்டுப் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது: தமிழக அரசு

கரோனா பரவலைத் தடுக்க விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது: தமிழக அரசு
Updated on
1 min read

கரோனா பரவலைத் தடுக்க விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 3,986 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.சென்னையில் மட்டும் 1459 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதையடுத்து கரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஏப்ரல் 10 முதல் விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com