நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வுட் விலகியுள்ளார்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2021, 12:33 pm

DIN


இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வுட் விலகியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. கடைசி இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிறகு, இந்திய அணி அற்புதமாகப் பந்துவீசி 120 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்தது. இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

லார்ட்ஸ் டெஸ்டில் 4-ம் நாளன்று ஃபீல்டிங் செய்தபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. எனினும் வலியுடன் இந்தியாவின் 2-வது இன்னிங்ஸில் அவர் பந்துவீசினார். இந்நிலையில் காயத்திலிருந்து குணமாகாததால் 3-வது டெஸ்டிலிருந்து மார்க் வுட் விலகியுள்ளார். இதையடுத்து 3-வது டெஸ்டில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சகிப் முகமது விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.