மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெண்கலப் பதக்கத்தை இழந்தார் இந்தியாவின் வினோத் குமார்

எஃப் 52 பிரிவில் பங்கேற்க வினோத் குமார் தகுதி பெறவில்லை என தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது. 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 10:10 am

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்ற நிலையில் அவருடைய பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

நேற்று நடைபெற்ற ஆடவா் வட்டு எறிதல் எஃப் 52 பிரிவில் 19.91 மீ தூரம் எறிந்து மூன்றாவது இடத்துடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா் இந்திய வீரா் வினோத் குமாா். 41 வயதான வினோத் குமாா் இதில் புதிய ஆசிய சாதனையையும் நிகழ்த்தினார். வினோத் குமாா் இரண்டாவது முயற்சியில் 18.32 மீட்டரும், மூன்றாவது முயற்சியில் 17.80 மீட்டரும், அடுத்த முயற்சியில் 19.12 மீட்டரும் எறிந்தாா். 5-ஆவது முயற்சியில் 19.91 மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றாா்.

இந்நிலையில் இப்போட்டியின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது. தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த முடிவின்படி வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எஃப் 52 பிரிவில் பங்கேற்க வினோத் குமார் தகுதி பெறவில்லை என தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7-லில் இருந்து 6-ஆகக் குறைந்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.