தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்: புதிய வீரரைத் தேர்வு செய்த ஆர்சிபி அணி!

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து ஆர்சிபி அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 6:29 am

DIN

ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து ஆர்சிபி அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் ஆறு ஆட்டங்களில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். 2018-ல் ஆர்சிபி அணியில் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், 32 ஆட்டங்களில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இங்கிலாந்தில் இருந்தபோது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தற்போது ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். இதையடுத்து சுந்தருக்குப் பதிலாக பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 போட்டிக்காக 5 புதிய வீரர்களை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.