அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்திய மகளிருக்கு 220 ரன்கள் வெற்றி இலக்கு: ஆறுதல் வெற்றி பெறுமா?

இந்திய மகளிருடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 3:09 pm

DIN


இந்திய மகளிருடனான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து மகளிர், இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தாமதத்தினால் ஆட்டம் இருஅணிகளுக்கும் தலா 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய மகளிருக்கு ஷிகா பாண்டே சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். இன்னிங்ஸின் 2-வது ஓவரிலேயே டேமி பியூமௌண்ட் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, லாரென் வின்ஃபீல்ட் ஹில் மற்றும் கேப்டன் ஹீத்தர் நைட் பாட்னர்ஷிப் அமைத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 67 ரன்கள் சேர்த்த நிலையில் வின்ஃபீல்ட் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து நைட் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, நடாலி சிவர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிதளவு சோபிக்கவில்லை.

இதனால், நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணித் தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ஜுலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ், ஸ்நே ராணா, ஹர்மன்பிரீத் கௌர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதலிரண்டு ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி தோற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.