இங்கிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்கள்: விடியோ வெளியிட்ட பிசிசிஐ

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள்
இங்கிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்கள்: விடியோ வெளியிட்ட பிசிசிஐ
Published on
Updated on
1 min read


டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் செளதாம்ப்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது.

இந்நிலையில் செளதாம்ப்டன் சென்ற இந்திய அணியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இந்திய அணியினர் இங்கிலாந்து சென்றது பற்றிய விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com