மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்று: இந்திய வீரர்கள் அனைவரும் வெளியேற்றம்!

பிரெஞ்சு ஓபன் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்கள். 

News image
அங்கிதா
Updated On :27 மே 2021, 4:58 am

DIN

பிரெஞ்சு ஓபன் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்கள். 

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டி, மே 30 அன்று பாரிஸ் நகரில் தொடங்கவுள்ளது. 

சுமித், பிரஜ்னேஷ், ராம்குமார், அங்கிதா ரெய்னா என நான்கு இந்தியர்கள் பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்றார்கள். இந்திய வீரரான பிரஜ்னேஷ், 2-6, 2-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஆஸ்கரிடம் முதல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்தார். எனினும் சுமித் நாகல், ராம்குமார், அங்கிதா ஆகியோர் முதல் முதல் தகுதிச்சுற்று ஆட்டங்களில் வெற்றி அடைந்தார்கள். எனினும் அடுத்த ஆட்டத்தில் மூவரும் தோல்வியைடைந்துள்ளார்கள். 

ஜெர்மனியின் கிரீட் மின்னனுக்கு எதிரான ஆட்டத்தில் 2-6, 0-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார் அங்கிதா. உஸ்பெகிஸ்தான் வீரரான டெனிஸிடம் 1-6, 2-6 என்ற நேர் செட்களில் ராம்குமாரும் தோல்வியடைந்தார். 

இந்தியாவின் நெ.1 வீரரான சுமித் நாகல், சிலியின் டபிலோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 3-6, 3-6 என்ற நேர் செட்களில் சுமித் நாகல் தோல்வியடைந்ததால் இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய அணியினரின் பங்களிப்பு இத்துடன் நிறைவுபெற்றது. நான்கு வீரர்களில் யாரும் முதல் சுற்றுக்குத் தகுதியடையாததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.