தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஐபிஎல் 2-ம் பகுதி: ஷகிப், முஸ்தபிஸூருக்கு அனுமதி மறுப்பு

ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்க வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், முஸ்தபிஸூர் ரஹ்மானுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :31 மே 2021, 3:25 pm

DIN


ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்க வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், முஸ்தபிஸூர் ரஹ்மானுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசன் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள ஆட்டங்களை நடத்த பிசிசிஐ சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஷகிப் அல் ஹசன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் முஸ்தபிஸூர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்க தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

பிராந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த நஜ்முல் தெரிவித்தது:

"சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இருப்பதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இருவருக்கும் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவது சாத்தியமற்றது. அதற்கான வாய்ப்புகளே இல்லை. டி20 உலகக் கோப்பை வருவதால், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது."

மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ள அதே காலகட்டத்தில் வங்கதேச அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது. முன்னதாக, ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்களை அனுமதிக்க முடியாது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் தெரிவித்தது.

ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்பது குறித்து வீரர்களுடன் தற்போதைக்குப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.