கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா பரிசோதனை கட்டாயமில்லை: அகில இந்திய டென்னிஸ் சங்கம்

இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட கரோனா பரிசோதனை கட்டாயமில்லை

News image
Updated On :23 நவம்பர் 2021, 9:38 am

DIN

இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) கூறியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும் பயிற்சியாளர்களும் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என ஏஐடிஏ முன்பு கூறியிருந்தது. இப்போது தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

ஏஐடிஏ போட்டிகளில் கரோனா பரிசோதனை குறித்து ஒரு தகவல். 2021, நவம்பர் 22 முதல் ஏஐடிஏ போட்டிகளில் கரோனா பரிசோதனைகள் கட்டாயமில்லை. வெப்ப நிலை பரிசோதனை, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவை டென்னிஸ் நடக்கும் பகுதிகளில் அவசியமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதேசமயம் வீரர், பயிற்சியாளர், பெற்றோர் என யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அவர்களிடம் கரோனா பரிசோதனை சான்றிதழ் கேட்கும் அதிகாரம் போட்டியின் இயக்குநருக்கு உள்ளது என்று ஏஐடிஏ ட்விட்டரில் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.