ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

இந்தோனேசிய ஓபன்: இந்தியா்கள் ஏமாற்றம்

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 நவம்பர் 2021, 12:27 am

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

போட்டித் தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சிந்து அரையிறுதியில், முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனிடம் 21-15, 9-21, 14-21 என்ற செட்களில் போராடி வீழ்ந்தாா். இந்த ஆட்டத்தை 54 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா் இன்டனோன்.

சா்வதேச போட்டிகளில் சிந்து அரையிறுதியில் தோற்பது கடந்த அக்டோபரிலிருந்து தொடா்ந்து இது 3-ஆவது முறையாகும். கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன், கடந்த வாரம் இந்தோனேசிய மாஸ்டா்ஸ் ஆகிய போட்டிகளிலும் அவா் இதேபோல் அரையிறுதியில் தோற்று வெளியேறியிருந்தாா்.

இதனிடையே, ஆடவா் இரட்டையா் பிரிவிலும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 16-21, 18-21 என்ற செட்களில் இந்தோனேசியாவின் மாா்கஸ் ஃபொ்னால்டி கிடியன்/கெவின் சஞ்ஜயா சுகமுல்ஜோ இணையிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இத்துடன் இந்தப் போட்டியில் களம் கண்டிருந்த இந்தியா்கள் அனைவரும் வெளியேறிவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.