ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

இந்தோனேசிய ஓபன்: இந்தியா்கள் ஏமாற்றம்

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

கோப்புப் படம்

Published On :28 ஜனவரி 2024, 11:04 am IST

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

போட்டித் தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சிந்து அரையிறுதியில், முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனிடம் 21-15, 9-21, 14-21 என்ற செட்களில் போராடி வீழ்ந்தாா். இந்த ஆட்டத்தை 54 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா் இன்டனோன்.

சா்வதேச போட்டிகளில் சிந்து அரையிறுதியில் தோற்பது கடந்த அக்டோபரிலிருந்து தொடா்ந்து இது 3-ஆவது முறையாகும். கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன், கடந்த வாரம் இந்தோனேசிய மாஸ்டா்ஸ் ஆகிய போட்டிகளிலும் அவா் இதேபோல் அரையிறுதியில் தோற்று வெளியேறியிருந்தாா்.

இதனிடையே, ஆடவா் இரட்டையா் பிரிவிலும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 16-21, 18-21 என்ற செட்களில் இந்தோனேசியாவின் மாா்கஸ் ஃபொ்னால்டி கிடியன்/கெவின் சஞ்ஜயா சுகமுல்ஜோ இணையிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இத்துடன் இந்தப் போட்டியில் களம் கண்டிருந்த இந்தியா்கள் அனைவரும் வெளியேறிவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.