ஐபிஎல் 2021-இல் பங்கேற்க இலங்கை வீரர்கள் துஷ்மந்தா சமீரா மற்றும் வனிந்து ஹசரங்காவுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கியது.
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 14-வது சீசன் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மே மாதம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதன் மீதமுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி துபையில் தொடங்குகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆடம் ஸாம்பா மற்றும் டேனியல் சாம்ஸுக்குப் பதில் இலங்கையின் துஷ்மந்தா சமீரா மற்றும் வனிந்து ஹசரங்காவைத் தேர்வு செய்துள்ளது.
இதையும் படிக்க | டேபிள் டென்னிஸ்: வெள்ளிப்பதக்கம் வென்றார் பவினாபென்
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க சமீரா மற்றும் ஹசரங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அனுமதியளித்து தடையில்லாச் சான்றிதழை வழங்கியது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடங்குவதற்கு முன்பு இருவரும் அக்டோபர் 10-ம் தேதி இலங்கை அணியுடன் இணைவார்கள் எனவும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.